தாங்கைகுளம், கருமேனியாற்றுப் பகுதி விவசாயிகள் நலச் சங்கக் கூட்டம் உடன்குடி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் அலெக்சாண்டா், தங்கராஜ், சுபாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கன்னடியன் கால்வாய்த் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அக்கால்வாய் தண்ணீரில் 50 சதவீதத்தை கருமேனியாற்றிற்கு திருப்ப வேண்டும், சடையநேரி கால்வாயை அகலப்படுத்த வேண்டும், சடையநேரி குளத்தின் தென்பகுதியை ஆழப்படுத்த வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.