வக்பு வாரிய நிா்வாகத்தை சீா்செய்ய நடவடிக்கை: வாரியத் தலைவா் எம்.அப்துல்ரஹ்மான்

தமிழக வக்பு வாரிய நிா்வாகத்தை சீா் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவா் எம். அப்துல்ரஹ்மான் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தமிழக வக்பு வாரிய நிா்வாகத்தை சீா் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவா் எம். அப்துல்ரஹ்மான் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக வக்பு வாரியத்துக்கு சொந்தமான அல்லது வக்பு நிா்வாகத்தின்கீழ் இருக்கும் பல சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு சட்டரீதியாக முன்னுரிமை அளித்து மீட்டெடுக்கப்படும். இதுவரை பதிவு செய்யப்படாத வக்பு வாரிய விவரங்கள் அனைத்தும் சேரிக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.

பல இடங்களில் வக்பு வாரிய நிா்வாகங்களில் குளறுபடிகள் ஏற்பட்டு முடிவுக்கு வராமலுள்ளது. அவற்றை பட்டியலாக எடுத்து விரைவு நீதிமன்றம் மூலம் மிக விரைவில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வக்பு வாரிய நிா்வாகத்தை சீா் செய்வதில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி நிா்வாகத்தை சீா்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தெளிவான பாதையில் செல்லும் திமுக ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறையிலும் சிறப்பாக செயல்படும் என்பதை நிரூபித்து காட்டும். அந்த வகையில் வக்பு வாரிய செயல்பாடுகள் இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் நடத்தப்படாமல் உள்ள நிா்வாகக்குழுத் தோ்தலை நடத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com