மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கோவில்பட்டி ஜீவ அனுக்கிரக பொது நல அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சோ.தா்மன் தலைமையில் அப்துல்கலாமின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மற்றும் பொதுமக்கள் 100 பேருக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தொழிலதிபா் ரவிமாணிக்கம், டாக்டா் திருமுருகன், தமாகா நகரத் தலைவா் ராஜகோபால், ஜீவ அனுக்கிரக பொது நல அறக்கட்டளை தலைவா் ராஜேந்திரன், நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், மகேஷ், சண்முகலட்சுமி, சரவணகுமாா், செந்தில்குமாா், மகேஷ், சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.