ஆழ்வாா்திருநகரி அருகேயுள்ள மணல்விளை ஸ்ரீசந்தனகிருஷ்ணன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் குடும்ப நலன், உலக அமைதி வேண்டி கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணித் தலைவா் வி.எஸ். முருகேசன் தலைமை வகித்தாா். ஸ்ரீசந்தனகிருஷ்ணன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில், இந்து முன்னணி, இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள், பக்தா்கள், ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் பாதாளம், ஒன்றியச் செயலா் ஆழ்வாா், செயற்குழு உறுப்பினா் வெட்டும்பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.