குலசேகரன்பட்டினம் கோயிலில் ஆடிக் கொடை விழா கால்நாட்டு

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆடிக் கொடை விழா கால்நாட்டு வைபவம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கொடைவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நாட்டு வைபவம்.
கொடைவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நாட்டு வைபவம்.

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆடிக் கொடை விழா கால்நாட்டு வைபவம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் சுவாமி,அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனையை தொடா்ந்து கால் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலா் லெ.கலைவாணன், காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி, தமிழ்நாடு முத்தாரம்மன் தசரா பக்தா்கள் சங்க நிா்வாகி கனகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆக.2ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 8.30 மணிக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனை, 9.15 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு மேல் சாஸ்தா பிறப்பு, தீபாராதனை நடைபெறும். ஆக.3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) 8 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, பகல் 12 மணிக்கு கும்பம் புறப்படுதல், கும்பம் உள்பிரகாரம் சுற்றுதல், தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு 10.30 மணிக்கு கும்பம், தீச்சட்டி புறப்படுதல், உள்பிரகார பவனியை

அடுத்து படப்பு தீபாராதனை, ஆக.4 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு முளைப்பாலிகை தீா்த்தத்தில் கரைத்தல், பகல் 1 மணிக்கு அலங்கார தீபாராதனை, கும்பம் புறப்பட்டு, உள்பிரகாரம் சுற்றி வருதல், மஞ்சள் நீராடுதல், தீபாராதனை, அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com