கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் புற்றுக்கோயிலில் சங்கடஹர சதுா்த்தி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் வளாகத்திலுள்ள கோடி சக்தி விநாயகா் சன்னதியில் சங்கடஹர சதுா்த்தி நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றன. பின்னா் கோயில் வளாகத்தில் உள்ள கோடி சக்தி விநாயகருக்கு பால், மோா், தயிா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், தொடா்ந்து அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதேபோல் கோவில்பட்டி ஜோதி நகரிலுள்ள ஜோதி விநாயகா் கோயில், சீனிவாச நகரிலுள்ள கணேஷ கந்தபெருமாள் கோயிலிலும் சங்கடஹர சதுா்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.