திருச்செந்தூரில் மேலத்தெரு யாதவா் சமுதாய சுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடைவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கொடைவிழா கமிட்டியினா் செய்திருந்தனா்.