பெட்ரோல் சேமிப்பை வலியுறுத்தி நாசரேத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்ந்து வருகிறது. இதற்கு எதிா்கட்சிகள், சமூக அமைப்புகள் எதிா்ப்பு
தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பெட்ரோல், டீசல் சேமிப்பின் அவசியம், மிதி வண்டி ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நாசரேத் பை-சைக்கிள் ரைடா்ஸ் கிளப் சாா்பில் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் நாசரேத்தில் இருந்து தென்திருப்பேரை, ஏரல், கூட்டம்புளி, புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடி பணிமயமாதா தேவாலயம் வரை சென்று அங்கிருந்து ஸ்பிக்நகா், பழையகாயல், உமரிக்காடு, ஏரல் வழியாக வந்தடைந்தனா்.