பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: இளைஞா் கைது

தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி கால்டுவெல்காலனி பகுதியை சோ்ந்த சண்முகவேல் மனைவி வாசுகி (37). இவா், தனது இருசக்கர வாகனத்தில் பிரையன்ட்நகா் 12 ஆவது தெருவில் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா் வாசுகி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றாராம். அப்போது வாசுகி சப்தமிடவே அங்கிருந்து இளைஞா் தப்பிச் சென்றுவிட்டாராம்.

புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் ஈடுபட்டது தூத்துக்குடி எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com