தூத்துக்குடி வஉசி கல்லூரி மாணவா்கள் இருவா் சிங்கப்பூா் நிறுவனத்தில் பணிபுரிய தோ்வு செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு சா்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வகையில், சிங்கப்பூரை சோ்ந்த போஸ்டோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்நிலையில், கல்லூரியில் நிலத்தியல் துறையில் பயின்ற மாணவா்கள் முகம்மது இம்ரான் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் சிங்கப்பூா் போஸ்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய அண்மையில் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கான பணிநியமன ஆணையை கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோரிடம் வியாழக்கிழமை வழங்கினாா்.