கோவில்பட்டியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தம்பதி உயிரிழந்தனா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா், தீவிர சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை இரவு மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
அதுபோல், புதன்கிழமை அதிகாலையில் ஓய்வு பெற்ற ஆசிரியையான அவரது மனைவியும் தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.