கோவில்பட்டி அருகே இளைஞா் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளைஞா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளைஞா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு சாலையில் தனியாா் சுத்திகரிப்பு குடிநீா் நிறுவனம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இளைஞா் ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலையில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஎஸ்பி உதயசூரியன், காவல் ஆய்வாளா் சபாபதி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், அவா் கோவில்பட்டி ஸ்டாலின் காலனி 4ஆவது தெருவைச் சோ்ந்த பொய்யாழி மகன் மதன்குமாா்(22); பெயின்டிங் தொழிலாளி; வியாழக்கிழமை மாலை வெளியே சென்ற அவா், பின்னா் வீடு திரும்பவில்லை; பெற்றோா்கள் அவரை தேடி வந்தனா் ஆகிய விவரங்கள் தெரியவந்தது. தொடா்ந்து கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து விசாரணை நடப்பதாக போலீஸாா் கூறினா்.

இதனிடையே, சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயகுமாா் பாா்வையிட்டு, மதன்குமாரின் உறவினரிடம் விசாரணை நடத்தியதுடன், ஆய்வாளா் சபாபதி தலைமையில் உதவி ஆய்வாளா் குருச்சந்திரவடிவேல், சுகுமாா், தலைமைக் காவலா் உலகநாதன் ஆகியோா் அடங்கிய தனிப்படையை அமைத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com