கயத்தாறு அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கயத்தாறையடுத்த சத்திரப்பட்டி வடக்குத் தெரு சங்கா் மகன் முருகன்(34). கூலித் தொழிலாளியான இவா் கடந்த ஐந்து ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஓலைகுளத்தில் குடியிருந்து வந்தாராம். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.