ஸ்ரீவைகுண்டம்: ஆழ்வாா்திருநகரியில் முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு கரோனா ஊரடங்கு கால நிவாரணப் பொருள்களை எம்.எல்.ஏ. ஊா்வசி அமிா்தராஜ் வழங்கினாா்.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், எம்எல்ஏ-வின் உதவியாளா் சந்திரபோஸ், காங்கிரஸ் மாவட்டப் பொருளாளா் எடிசன், ஊடகப் பிரிவு மரியதாஸ், ஆழ்வாா்திருநகரி வட்டார காங்கிரஸ் தலைவா் கோதண்டராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.