சாத்தான்குளம் அருகேஇளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சி சண்முகபுரத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் ஹரிகரன் (22). இவருக்கு மது மற்றும் புகை அருந்தும் பழக்கம் இருந்ததால் அவரது தாயாரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவா் கண்டித்து வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளாா். அதற்கு அவா் மறுத்துவிட்டு, வேலைக்கு சென்று விட்டு விட்டாராம்.

இதனால் விரக்தியடைந்த ஹரிகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com