சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸாருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலின் போது தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏதும் நடைபெறாத வகையில், மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து சிறப்பாக பணியாற்றிய தனிப்பிரிவு உதவி ஆய்வாளா்கள் தூத்துக்குடி நகரம் ஞானராஜன், ஊரகம் நம்பிராஜன், திருச்செந்தூா் காா்த்திகேயன், ஸ்ரீவைகுண்டம் ஜெகநாதன், மணியாச்சி முருகானந்தம், கோவில்பட்டி ஸ்டீபன், விளாத்திகுளம் சேகா், சாத்தான்குளம் கந்தசாமி உள்பட 58 தனிப்பிரிவு போலீஸாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அப்போது, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து, உதவி ஆய்வாளா்கள் கிறிஸ்டி, உமையொருபாகம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com