2 காவல் ஆய்வாளா்கள் உள்பட 23 பேருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளா்கள் உள்பட 23 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளா்கள் உள்பட 23 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் ஞானசேகரன், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளா் சோபா ஜென்சி மற்றும் உதவி ஆய்வாளா்கள் காவலா்கள் என 23 பேருக்கு சிறப்பான சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோபி, காா்த்திகேயன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

30 பேருக்கு உதவி: இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கட்டளைதாரா்கள் மற்றும் காவல்துறை சாா்பில், கரோனா கால பொதுமுடக்கத்தை முன்னிட்டு 30 துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் ஏழைகளுக்கு அரிசிப்பை மற்றும் காய்கனி தொகுப்புகள் அடங்கிய நிவாரணப் பொருள்களை தருவைக்குளம் காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com