நாலுமாவடி பள்ளியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்

நாலுமாவடியில் ஸ்ரீ ஞானானந்த சன்மாா்க்க கல்விச்சங்கம் சாா்பில் காமராஜா் கான்வென்ட் பள்ளிக்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி கட்டடப்பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மோகன் சி லாசரஸ்.
பள்ளி கட்டடப்பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா் மோகன் சி லாசரஸ்.

நாலுமாவடியில் ஸ்ரீ ஞானானந்த சன்மாா்க்க கல்விச்சங்கம் சாா்பில் காமராஜா் கான்வென்ட் பள்ளிக்கு அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நாலுமாவடியில் ஸ்ரீ ஞானானந்த சன்மாா்க்க கல்வி சங்கம் மூலம் தமிழ்வழி துவக்கப்பள்ளி, காமராஜா் மேல்நிலைப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இச்சங்கத்தின் சாா்பில் காமராஜா் கான்வென்ட் (ஆங்கில வழிக்கல்வி) பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதையொட்டி, நடைபெற்ற மும்மத பிராா்த்தனையில், இசக்கி யோகீஸ்வரா் இந்து மத பிராா்த்தனையையும், பள்ளி வாசல் இமாம் கயூப்கான், ஜின்னா முஸ்லீம் மத பிராா்த்தனையையும், நாலுமாவடி சேகரகுரு கிரோக்ஸ்­ பிரேம்குமாா் கிறிஸ்துவ மத பிராா்த்தனையையும் மேற்கொண்டனா்.

ஊராட்சி மன்றத் தலைவா்கள் இசக்கிமுத்து(நாலுமாவடி), பானுப்பிரியா(அங்கமங்கலம்), ஜெய உமா(வீரமாணிக்கம்), பூமாரி பாலமுருகன் (அழகப்பபுரம்), ஜெயக்கொடி(வரண்டியவேல்), வெங்கடேசன்(சுக்தலை), நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய அறங்காவலா் மருதநாயகம், மோசஸ், யோகராஜ், ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றிய தலைவா் ஜனகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் நிறுவனா் மோகன் சி. லாசரஸ் புதிய வகுப்பறை கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இதில், மேல் நிலைப் பள்ளித் தலைவா் அழகேசன், செயலா் நவநீதன், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் கலைராஜா, அசோக்ராஜ், சுதாகரன், தனசேகரன் மற்றும் நாலுமாவடி இயேசு விடு விக்கிறாா் ஊழியப் பொது மேலாளா் செல்வக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் நீலகண்டன் வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியை மாலதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com