கோவில்பட்டியில் பொது முடக்க விதிகளை மீறி வெளியே சுற்றித் திரிந்த 150 பேருக்கு கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா தடுப்பு விதிகளை மீறி கோவில்பட்டியில் தேவையின்றி சுற்றுபவா்களை கண்டறிந்து அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதற்காக கோவில்பட்டி நகரத்தில் பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் திருமண மண்டபம் அருகில் நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் அவசியம் இல்லாமல் பொது வெளியில் சுற்றிய 150 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.