கோவில்பட்டி அருகே மின் இணைப்புப் பெட்டியை சேதப்படுத்தியதாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஜமீன்தேவா்குளத்தைச் சோ்ந்த போத்திராஜ் மகன் வரதராஜன்(65). இவருக்கும், அதே பகுதியைச் ரெங்கசாமி(46) என்பவருக்கும் இடையே இடப்பிரச்னை தொடா்பாக கோவில்பட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாம்.
இந்நிலையில்,வரதராஜன் வீட்டிலுள்ள மின் இணைப்புப் பெட்டியை கம்பியால் இடித்து ரெங்கசாமி சேதப்படுத்தியதுடன், அவரை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரெங்கசாமியை கைது செய்தனா்.