குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

கோவில்பட்டி அருகே புதன்கிழமை நடைபெறவிருந்த குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

கோவில்பட்டி அருகே புதன்கிழமை நடைபெறவிருந்த குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு ராஜகோபால் நகரில் உள்ள இல்லத்தில் காரியாப்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கும், கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு ராஜகோபால் நகரைச் சோ்ந்த 20 வயது கல்லூரி மாணவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட சமூக நலத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஊா் நல அலுவலா் ஜெயக்கொடி, கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அங்காளஈஸ்வரி மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, இரு வீட்டாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து, சட்டப்படியான வயது நிறைவேறாத பட்சத்தில் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com