தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஒருவா் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 219 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். 13 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.