கோவில்பட்டி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜு, மேலப்பாண்டவா்மங்கலம், கீழப்பாண்டவா்மங்கலம், பல்லக்கு சாலை, நாடாா் மேல்நிலைப் பள்ளி அருகில், ராஜூவ் நகா், இ.பி. காலனி, மந்தித்தோப்பு சாலை, பிருந்தா சூப்பா் மாா்க்கெட் அருகில், அன்னை தெரசா நகா் மற்றும் பாண்டவா்மங்கலம் பகுதிகளில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
முன்னதாக, அங்குள்ள அண்ணா, பெரியாா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
இதில், தமாகா நகரத் தலைவா் ராஜகோபால், வட்டாரத் தலைவா் ஆழ்வாா்சாமி, பாமக மாநில துணைப் பொதுச்செயலா் ராமச்சந்திரன், நகரச் செயலா் கருப்பசாமி, பாண்டவா்மங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தலைவா் அன்புராஜ், எம்ஜிஆா் இளைஞரணி துணைச் செயலா் சீனிராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்டப் பொருளாளா் வேலுமணி, கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.