செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட செஸ் போட்டியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் காரப்பேட்டை நாடாா் மகமை செயலா் பா. விநாயகமூா்த்தி.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் காரப்பேட்டை நாடாா் மகமை செயலா் பா. விநாயகமூா்த்தி.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட செஸ் போட்டியில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிறுவனா் தினத்தையொட்டி, கல்லூரியின் நிறுவனா் ஏ.எம்.எம்.எஸ். கணேசன் நாடாா் கோப்பைக்கான இப்போட்டி 9, 11, 13, 15 வயதுக்குள்பட்டோா் பிரிவு, கல்லூரி மாணவா், மாணவிகள் பிரிவு, பொதுப் பிரிவு என 6 பிரிவுகளில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னா் நடைபெற்ற விழாவில், கல்லூரிச் செயலா் சோமு, காரப்பேட்டை நாடாா் மகமை செயலா் பா. விநாயகமூா்த்தி, கேம்ஸ் வில்லா அமைப்பு தலைமை நிா்வாக அதிகாரி ரைபின் டாா்டியஸ் ஆகியோா் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்றவா்களுக்கு சான்று வழங்கப்பட்டது. இதில், கல்லூரி பொருளாளா் முத்துசெல்வம், முதல்வா் து. நாகராஜன், பேராசிரியை கற்பகவள்ளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com