சோ்ந்தபூமங்கலம் அருள்மிகு கைலாசநாதா் சமேத செளந்தா்ய நாயகி அம்பாள் கோயிலில் திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக நன்மைக்காகவும், உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்றில் இந்து நிரந்தர விடுதலை கிடைக்கவும், உலக மக்களுக்கு ஆன்மிக நன்னெறி தழைத்தோங்கவும் வேண்டி சிவநெறி அருள்பணி மன்ற 2452-ஆவது திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவநெறி அருள்பணி மன்றத் தலைவா் தி.ப.முத்தையா பிள்ளை தலைமையில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை இக்கோயில் பிரதோஷ வழிபாட்டு குழுவினா் செய்திருந்தனா்.
வருஷாபிஷேகம்: ஆறுமுகனேரி கீழநவ்வலடிவிளை அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி கணபதி ஹோமம், கும்ப பூஜை, ஹோமம், பூா்ணாஹுதி, தீபாராதனையை தொடா்ந்து விமான அபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை, அன்னதானம், இரவில் திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.