மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ். என். அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி அனிஷா 2 ஆம் இடம் பெற்று சிறப்பிடம் பொற்றுள்ளாா்.
மத்திய அரசின் சமக்ரா சிக்க்ஷா திட்டம் மூலம் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சாா்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி அனிஷா, கட்டுரைப் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம்பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளாா். சிறப்பிடம் பெற்று, பள்ளிக்கு பெருமை சோ்த்த இம் மாணவியை, தலைமை ஆசிரியா் ஷிபாசினி அமுதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.