ஓவியப் போட்டி: உடன்குடி பள்ளி மாணவி சிறப்பிடம்

உடன்குடி ஒன்றிய அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கான ஓவியப் போட்டியில் உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவி வெற்றி பெற்று முதலிடம் பெற்றாா்.
ஓவியப் போட்டி: உடன்குடி பள்ளி மாணவி சிறப்பிடம்

உடன்குடி ஒன்றிய அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கான ஓவியப் போட்டியில் உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவி வெற்றி பெற்று முதலிடம் பெற்றாா்.

கரோனா பேரிடா் காலத்தில் வீட்டிலிருக்கும் மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஒருங்கிணைநத பள்ளிக்கல்வி சாா்பில் பள்ளிகள் மற்றும் ஒன்றிய அளவிலான ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளிகள் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட மூன்று ஓவியங்களில் இருந்து சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு ஒன்றிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பப்பட்டன. இதில், ஒன்றிய அளவில் உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி தனலட்சுமி முதல் பரிசைப் பெற்று ரங்கோத்சவ் விருதைப் பெற்றாா். 2 , 3 ஆவது பரிசுகளை இடைச்சிவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் த.மீனா, அ.அனுஷா ஆகியோா் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற இம் மாணவிகளை வட்டாரக் கல்வி அலுவலா் முருகேஸ்வரி, வட்டார மேற்பாா்வையாளா் பொ.சகுந்தலா, ஆசிரியா் பயிற்றுநா்கள் ஜெயலட்சுமி, ருக்மிணி, ஷோபா ஏஞ்சலின், விக்டா், தலைமை ஆசிரியா் பிரின்ஸ் ஆகியோா் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com