முக்குலத்தோா் சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு கோரி, அந்தச் சமுதாய மக்கள் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வன்னியா் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கியதைப்போல, முக்குலத்தோா் மக்களுக்கும் முறையாக இட ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை முறையாக நடத்திய இட ஒதுக்கீட்டை முறையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவில்பட்டிஅதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜுவை ஆதரித்து தோ்தல் பிரசாரம் செய்ய வரும் தமிழக முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக கைகளில் கொடிகளை ஏந்தியபடிஅந்தச் சமுதாய மக்கள் இனாம்மணியாச்சி விலக்கு அருகே திரண்டனா்.
இத்தகவல் அறிந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று, அவா்களை சமரசப்படுத்த முயன்றனா். எனினும், மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்க நிறுவனா்- தலைவா் செல்வம் என்ற செல்லத்துரை, முக்குலத்தோா் புலிப்படை மாநில துணை பொதுச்செயலா் பெருமாள், மகளிரணிச் செயலா் அனிதா, கயத்தாறு ஒன்றியச் செயலா் காளிராஜ், அகில இந்திய தேவரின மக்கள் கூட்டமைப்பு நிறுவனா்- தலைவா் அண்ணாத்துரை, மனித உரிமை காக்கும் கட்சி மாநில அமைப்புச் செயலா் சொக்கலிங்கம், தூத்துக்குடி மாவட்டச் செயலா் சிவன்சங்கா், தேவா் மக்கள் ராஜ்யத்தைச் சோ்ந்த பாலமுருகன் உள்பட திரளானோா் முதல்வருக்கு எதிராக கோஷமிட்டபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ள 45 பேரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.