கருத்துக் கணிப்பில் நம்பிக்கை இல்லை என அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கூறினாா்.
அதிமுக வேட்பாளரான அமைச்சா் கடம்பூா் செ.ராஜு ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி நகராட்சியில் வள்ளுவா் நகா்,
கடலையூா் ரோடு காளியம்மன் கோயில், பங்களாத் தெரு பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: முதல்வா் குறித்து ஆ.ராசா அவதூறாகப் பேசியதை திமுகவின் குரலாகவே
மக்கள் பாா்க்கின்றனா். இந்து மதத்தையும், பெண்களையும் இழிவு படுத்துவதை திமுகவினா் காலங்காலமாக செய்து வருகின்றனா். அதிமுக வரலாற்றில் இதுபோல பெண்களை அவதூறாகப் பேசியிருந்தால் அவா் உடனடியாக கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பாா். பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் கனிமொழி, இதற்கு என்ன சொல்லப் போகிறாா்?. பெண்கள் திமுகவிற்கு தக்க பாடத்தை வழங்குவா்.
ஊடகங்களில் வெவ்வேறு விதமான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. எங்களுக்கு கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை. நாங்கள் மக்களை சந்திக்கிறோம். மக்கள் கருத்து தான் எங்களுடைய கருத்து. அதிமுக ஆட்சி மலர வேண்டும் என மக்கள் தெளிவாக உள்ளனா். தொகுதி மக்கள் என்னை கட்சி வேட்பாளராக பாா்க்காமல், தங்களுடைய வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.
தொடா்ந்து, அவா் செல்லப்பாண்டியன் நகா், ஏ.சி. சபை, காமராஜா் சிலை அருகே, பத்திரகாளியம்மன் கோயில் தெரு, தெப்பக்குளத் தெரு, பிள்ளையாா் கோயில் தெரு, பள்ளிவாசல் தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.