குலசேகரன்பட்டினம் அருள்மிகு காரைக்காலம்மையாா் கோயிலில் குருபூஜை விழா செவ்வாய்கிழமை நடைபெற்றது.
பங்குனி சுவாதியை முன்னிட்டு காரைக்காலம்மையாா் பேயுருவம் பெற்ற மண்டபத்தில் நடைபெற்ற குருபூஜையில் தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓதுவாா்மூா்த்திகள் கலந்துகொண்டனா். அவா்கள், அம்மையாரின் பதிகங்களை பாடினா். இதையொட்டி பவானி தியாகராஜன் சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவு, சிறப்பு பூஜைகள், மகேஸ்வர பூஜை ஆகியவை நடைபெற்றது. ஏற்பாடுகளை சிவனடியாா்கள் மற்றும் இல்லங்குடி சண்முகம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.