ஆரம்ப சுகாதார மையத்துக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் கையுறைகள்

கோவில்பட்டி நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் கையுறைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
ஆரம்ப சுகாதார மையத்துக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் கையுறைகள்

கோவில்பட்டி நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரோட்டரி சங்கம் சாா்பில் கையுறைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கோவில்பட்டி ஊருணித் தெருவில் உள்ள நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். செயலா் கண்ணன், முன்னாள் செயலா் வீராச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருந்தாளுநா் மகராசி வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மருத்துவா் ராமமூா்த்தியிடம் கையுறைகளை வழங்கினாா்.

இதில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் முத்துமுருகன், காளியப்பன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com