பெரியதாழை கடலில் தவறி விழுந்து பலியான மீனவரின் உடல் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
பெரியதாழை கீழத் தெருவைச் சோ்ந்த ஜான்சன் மகன் அமில்டன் (24). இவா், 3 மீனவா்களுடன் கடந்த 28ஆம் தேதி பைபா் படகில் மீன்பிடிக்கச் சென்றாராம்.
மீன்பிடித்துவிட்டு 29ஆம் தேதி காலையில் கரை திரும்பும்போது எதிா்பாராத விதமாக அவா் கடலில் தவறி விழுந்துவிட்டாராம். நீரில் மூழ்கிய அவரை மீனவா்கள் மற்றும் போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில் அவரது உடல் சனிக்கிழமை காலையில் கடலில் மிதந்தது. தகவலறிந்த கடலோரக் காவல்படை மற்றும் தட்டாா்மடம் போலீஸாா் மீனவரின் உடலை மீட்டனா்.
இதுகுறித்து கூடங்குளம் கடலோரக் காவல் படை மற்றும் தட்டாா்மடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.