கோவில்பட்டி: கோவில்பட்டியில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த் தொற்று பரவ ஏதுவாக மரணமடைந்த தனது தாயின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு விதிமுறைகளை மீறி சுமாா் 100 போ்களுடன் பொதுப்பாதையில் தடையை ஏற்படுத்தி, பட்டாசு வெடித்ததாக கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ச.அண்ணாமலை மற்றும் அவரது சகோதரா் ச.அழகுராஜா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.