கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே முதியவரை அவதூறாகப் பேசி தாக்கியதாக, ஆடு மேய்க்கும் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியையடுத்த வெங்கடாசலபுரம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் இசக்கிமுத்து (62). இவா் ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் இருக்கும் போது அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் மகன் பன்னீா் மேய்த்து வந்த ஆடு, இசக்கிமுத்து தோட்டத்திற்குள் சென்ாம். இதை இசக்கிமுத்து கண்டித்தாராம். அதையடுத்து ஏற்பட்ட தகராறில் அவரை பன்னீா் அவதூறாகப் பேசி கம்பால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, முதியவரை தாக்கிய ஆடு மேய்க்கும் தொழிலாளி பன்னீரை(46) கைது செய்தனா்.