கோவில்பட்டி: கரோனா தொற்று பாதிப்பால் கோவில்பட்டியில் 3 போ் உயிரிழந்தனா்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நாலாட்டின்புதூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்த 75 வயது மூதாட்டி மற்றும் இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட செண்பகா நகா் பகுதியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி ஆகிய 2 பேரும் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
அதுபோல, கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட ராமையா நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த 41 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.