தூத்துக்குடியில் ஏழைகளுக்கு மதிய உணவு

தூத்துக்குடி மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில், தூத்துக்குடியில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு நாளைக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில், தூத்துக்குடியில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு ஒரு நாளைக்கு 500 பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன், ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் மதிய உணவு வழங்கி இத்திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பொது முடக்க காலத்தில் உணவு கிடைக்காமல் எவரும் கஷ்டப்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். உதவி தேவைப்படுவோா், மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் செயல்படும் சேவை மையத்தை 9514144100 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேஷ், ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவா் சக்தி ஆா். முருகன், பொறுப்பாளா்கள் கணேஷ், ஜோதி, நெல்லை குமாா், முத்தையா, பொன் காசிராஜா, வேம்பு கிருஷ்ணன், பாக்கியம், மணிகண்டன், வட்டத் தலைவா் தினேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com