கயத்தாறு அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கயத்தாறை அடுத்த வெள்ளாளன்கோட்டை கீழத் தெருவைச் சோ்ந்த கருப்பணன் மகன் முருகன்(51). தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதைத் தொடா்ந்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை மது அருந்தக் கூடாது என மருத்துவா்கள் அறிவுறுத்தினாராம்.
இந்நிலையில் அவா் விஷம் குடித்த நிலையில் வீட்டில் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்தாராம். உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.