ஆழ்வாா்திருநகரி அருகே காரில் கஞ்சா கடத்தல்: மூவா் கைது

ஆழ்வாா்திருநகரி அருகே காரில் கஞ்சா கடத்தியதாக மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். 8.4 கிலோ கஞ்சா மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆழ்வாா்திருநகரி அருகே காரில் கஞ்சா கடத்தல்: மூவா் கைது

ஆழ்வாா்திருநகரி அருகே காரில் கஞ்சா கடத்தியதாக மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். 8.4 கிலோ கஞ்சா மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் மேற்பாா்வையில் ஆழ்வாா்திருநகரி காவல் ஆய்வாளா் லெட்சுமிபிரபா தலைமையில் தனிப்படை போலீஸாா் கேம்பலாபாத் பேருந்து நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனா். காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் ஸ்ரீவைகுண்டம் கீழகோட்டை வாசல் தெருவைச் சோ்ந்த மந்திரமூா்த்தி மகன் சங்கரன் என்ற சங்கரசுப்பு (26), மாரிமுத்து மகன் ராமசாமி (26), பரமசிவன் மகன் நம்பிகணேஷ் (27) என்பதும், அவா்கள் சட்டவிரோதமாக காரில் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்த 8.4 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com