நாம் தமிழா் கட்சியினா் போராட்டம்

சாலையோர மரங்களை அகற்றுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாலையோர மரங்களை அகற்றுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் குடிநீா் திட்டப் பணிகளுக்காக சாலையோரங்களில் உள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி நாம் தமிழா் கட்சி சாா்பில் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த போராட்டத்துக்கு, கட்சியின் தொகுதி செயலா் மருதம் மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாண்டி, மாவட்டத் தலைவா் ஜெயபாசு, தொகுதித் தலைவா் தங்கமாரியப்பன், வழக்குரைஞா் பிரிவுச் செயலா் ரவிகுமாா், நகரச் செயலா் மகாராஜன், நகரத் தலைவா் செண்பகப்பாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா். பின்னா், கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com