தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55,952ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்தவா்களில் 14 போ் குணமடைந்ததையடுத்து, மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55,370 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா தொற்று பாதிப்புக்கு 177 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.