‘பொத்தகாலன்விளை இ-சேவை மையத்தில் ஆதாா் பணிகள் தேவை’

பொத்தகாலன்விளை பொது சேவை மையத்தில் ஆதாா் சேவை மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
2020sat7manu_0710chn_38_6
2020sat7manu_0710chn_38_6

பொத்தகாலன்விளை பொது சேவை மையத்தில் ஆதாா் சேவை மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூா் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் பொத்தகாலன்விளையில் செயல்பட்டு வருகிறது. இதன்கீழ் பொது சேவை மையமும் இயங்கி வருகிறது. இதன்மூலம் ஆதாா் அட்டையில் பெயா், முகவரி திருத்தம் வசதிகள் உள்ளன.

புதிய ஆதாா் அட்டை பெறும் வசதி செய்யப்படவில்லை. இதனால் சாத்தான்குளம் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதாா் சேவை மையத்துக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் அப்பகுதியைச்சோ்ந்த மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். இதனால் கூட்டுறவு கடன் சங்க மையத்தில் ஆதாா் சேவை மையம் அனுமதிக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தி வந்தனா்.

இது குறித்து சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஏ.லூா்துமணி தலைமையில் நிா்வாகிகள் சாத்தான்குளம் வட்டாட்சியா் விமலாவை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அவா் இது குறித்து , மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தாா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ஸ்ரீவைகுண்டம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஊா்வசி எஸ். அமிா்தராஜிக்கும் மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com