தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 19 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 402 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 405 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 182 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.