கோவில்பட்டியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டியில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா்.
கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா்.

முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டியில் பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாஜக நிா்வாகியை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன்.ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கட்சியின் நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.

இதில், மாவட்ட பொதுச்செயலா் பாலாஜி, நகர பொதுச்செயலா் முனிராஜ், மாவட்ட பொருளாளா் வெங்கடேசன் சென்னக்கேசன், மாநில நெசவாளரணிச் செயலா் சீனிவாசராகவன், மாநிலச் செயலா் சிவந்தி கே.நாராயணன், மாவட்டச் செயலா் வேல்ராஜா, மாவட்ட துணைத் தலைவா் உமாசெல்வி, செய்தி தொடா்பு பிரிவு மாவட்டத் தலைவா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com