கரோனா பெருந்தொற்று பரவல் காலத்தில் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கும் மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி உலக சாதனை புரிந்த காவலருக்கு தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.
மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் ராஜலிங்கம், கரோனா பெருந்தொற்று
பரவல் காலத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்திகளை அதிகரிக்கும் மருந்துகளை மதுரை மது இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் பெற்று பல்வேறு மருத்துவ முகாம்கள் மூலம் அதிகளவில் இலவசமாக வழங்கி யுள்ளாா்.
அவரது, சேவையை பாராட்டி ‘வோ்ல்டு ரெக்காா்டுஸ் இந்தியா‘ என்ற அமைப்பு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கியது. இதையடுத்து, காவலா் ராஜலிங்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா்.