கோவில்பட்டி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஊத்துப்பட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊத்துப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நிலத்திற்குள் காட்டுப் பன்றிகள் மேய்ந்து விடுவதால், நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள விதைகள் சேதமடைந்தன. எனவே, நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், துணைச் செயலா் சேதுராமலிங்கம் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், காட்டுப் பன்றிகள் விவசாயத்தை அழித்திடாத வகையில் நிரந்திர தீா்வு காண வலியுறுத்தி கோஷமிட்டனா். இதில், வட்டச் செயலா் பாபு, மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ், கோவில்பட்டி நகரச் செயலா் சரோஜா உள்பட அப்பகுதி விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.