சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட வாகைனேரியில் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, சாத்தான்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்து, தேசிய வேளாண் திட்டங்கள், நுண்ணீா் பாசனத்துக்கு அரசின் மானியம், சொட்டு நீா் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தாா். நுண்ணீா் பாசன கம்பெனி ஒருங்கிணைப்பாளா் மனோஜ், நுண்ணீா் பாசன பராமரிப்பு தொழில் நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா். உதவி வேளாண்மை அலுவலா் கற்பகம், வேளாண்மைத் துறையில் செயல்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
ஏற்பாடுகளைஅட்மா திட்ட பணியாளா்கள் ருக்மணி, நளினி ஆகியோா் செய்திருந்தனா்.