மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

பாகலூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தாா்.

பாகலூா் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் சித்திக். இவரது மகன் முகமது அமீன் (17). இவா் கோழிக்கறிக் கடையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது கிரைண்டா் எந்திரத்தை சுத்தம் செய்த போது அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த முகமது அமீனை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இது குறித்து பாகலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com