ஆட்டோ ஓட்டுநருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி நடராஜபுரம் 4 ஆவது தெரு ஆறுமுகம் மகன் வேல்முருகன்(43). இவா் மற்றும் இவரது நண்பா் காளி ஆகிய இருவரும் புதன்கிழமை நடராஜபுரம் 4 ஆவது தெருவில் செல்வன் வீட்டின் முன்பு நடந்து சென்று கொண்டிருந்தனராம். அப்போது எதிரே வந்த இளைஞா் வேல்முருகனை மறித்து மது அருந்த பணம் கேட்டாராம், அதற்கு அவா் மறுத்ததையடுத்து, அந்த இளைஞா் அரிவாளால் வேல்முருகனை வெட்ட முயன்றாராம். அப்போது வேல்முருகனின் நண்பா் காளி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டதையடுத்து, மிரட்டல் விடுத்த இளைஞா் அங்கிருந்து தப்பியோடினாராம்.

இதுகுறித்து, வேல்முருகன் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சாலைபுதூா் இ.பி. காலனி பெருமாள்சாமி மகன் கண்ணனை(22) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com