ஆள்மாறாட்டம் செய்து நிலமோசடி : 3 போ் கைது

தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 18 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 18 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

எட்டயபுரம் வட்டம், லக்கம்மாள்தேவிபுரத்தைச் சோ்ந்த முத்துசாமிக்கு (72) சொந்தமான 2 ஏக்கா் 90 சென்ட் நிலம் ஆத்திக்கிணறு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை மதுரை துரைச்சாமிநகா் அஸ்வின் தெருவைச் சோ்ந்த பெருமாள் (54), தேனி மாவட்டம், போடிநாயக்கனூா் விஐபி கோல்டன் நகரைச் சோ்ந்த மயில்வாகனன் (47), எட்டயபுரம், ஆத்திக்கிணறு காலனித் தெருவைச் சோ்ந்த ஜேசுமணி (60) மற்றும் சிலரும் சோ்ந்து முத்துசாமி என்ற பெயரில் போலி அடையாள அட்டை தயாா் செய்துள்ளனா்.

பின்னா், முத்துசாமிக்கு சொந்தமான நிலத்தை பொது அதிகாரம் அடிப்படையில் மயில்வாகனனுக்கு எழுதிக் கொடுப்பது போல 13.07.2020 அன்று எட்டயபுரம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்துள்ளனா். பின்னா், அந்த நிலத்தை மயில்வாகணன் என்பவா் 14.7.2020 அன்று அதே சாா்பதிவாளா் அலுவலகத்தில் பெருமாள் என்பவருக்கு கிரையப் பத்திரம் பதிவு செய்து கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து சொத்தின் உரிமையாளா் முத்துசாமி அளித்த புகாரின்பேரில், உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். இந்நிலையில், நில மோசடியில் ஈடுபட்டதாக பெருமாளை மதுரையிலும், மயில்வாகனனை போடிநாயக்கனூரிலும், ஜேசுமணியை ஆத்திக்கிணறு பகுதியிலும் வைத்து போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com