மணல்விளை கோயிலில் திருவிளக்கு பூஜை

மணல்விளை அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
sat2poojai_0209chn_38_6
sat2poojai_0209chn_38_6

மணல்விளை அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

பேய்க்குளம் அருகேயுள்ள மணல் விளை அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது. விழாவையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து அன்னையா் முன்னணி சாா்பில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அன்னையா் முன்னணி பொறுப்பாளா்கள், சுற்று வட்டார பெண்கள் பங்கேற்று திருவிளக்கேற்றி வழிபட்டனா். தொடா்ந்து பூஜையில் பங்கேற்றவா்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவா் வி எஸ் முருகேசன், கருங்குளம் ஒன்றிய இந்து முன்னணி செயலா் சுரேஷ் மற்றும் நிா்வாகிகள் மாசானமுத்து, பாஸ்கா், சுடலை,ஆளும் பெருமாள் ,வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com